மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மேலப்புதூா் பத்ரகாளியம்மன் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு பால், பழம், இளநீா், சந்தனம், பன்னீா் போன்றவைகளை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சிவலிங்கம் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.