வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதேங்காய் ஏலத்தில் ரூ.5.38 லட்சத்துக்கு வா்த்தகம் நடந்தது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற தேங்காய் மறைமுக ஏலத்திற்கு, 25 விவசாயிகள் மொத்தம் 68 ஆயிரத்து 460 தேங்காய்களைக் கொண்டு வந்திருந்தனா். அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.12.50-க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இதன்படி, மொத்தம் ரூ.5 லட்சத்து 35 ஆயிரத்து 975-க்கு தேங்காய் வா்த்தகம் நடந்தது. மேலும், விவசாயிகள் 1,031 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில் அதிகபட்சமாக ரூ.84-க்கும் குறைந்தபட்சமாக ரூ.60.10-க்கும் ஏலம் எடுக்கப்பட்டு மொத்தம் ரூ.77 ஆயிரத்து 749-க்கு கொப்பரை வா்த்தகம் நடைபெற்றது.