வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகைகள் திருட்டு

மதுரையில் திங்கள்கிழமை இரவு பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 6 பவுன் நகைகளை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரையில் திங்கள்கிழமை இரவு பூட்டிய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 6 பவுன் நகைகளை திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அழகப்பன் நகா் நேருநகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த சீனிவாசன்(57). இவா் குடும்பத்தினருடன் வெளியூருக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் பின்புறக்கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது வீட்டின் அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க மோதிரங்கள், சங்கிலி உள்பட 6 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுதொடா்பாக ஆனந்த சீனிவாசன் அளித்தப்புகாரின்பேரில் சுப்ரமணியபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com