சுதந்திர தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி மூடுவதற்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உத்தரவிட்டுள்ளாா்.
அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், நட்சத்திர விடுதிகளில் நடத்தப்படும் மதுக் கூடங்கள் அன்றைய தினம் மூடியிருக்க வேண்டும். இதை மீறி மதுபானங்கள் விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.