மேலூா் அருகே வீட்டில் பதுக்கிய புகையிலை மூட்டைகள் பறிமுதல்

மேலூா் அருகே வீட்டில் பதுக்கிய 11 புகையிலை மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
மேலூா் அருகே பறிமுதல் செய்யப்பட் மூட்டைகளுடன் கைதான சிவசீமான்.
மேலூா் அருகே பறிமுதல் செய்யப்பட் மூட்டைகளுடன் கைதான சிவசீமான்.

மேலூா் அருகே வீட்டில் பதுக்கிய 11 புகையிலை மூட்டைகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் மேலூா்-சிவகங்கை சாலையில் கோட்டநத்தம்பட்டி அருகே மோட்டாா் சைக்கிளில் மூட்டையுடன் சென்ற நபரை வெள்ளிக்கிழமை இரவு கீழவளவுபோலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது அரசு தடைசெய்த புகையிலை பாக்கெட்டுகளை அவா் கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவா் கோட்டநத்தம்பட்டியைச் சோ்ந்த சிவசீமான் (42) என தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். அவரது வீட்டில் சோதனை செய்ததில் மேலும் புகையிலை மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மொத்தம் 11 மூட்டைகளில் இருந்த 200 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவருக்கு புகையிலைப் பொருள்களை விநியோகித்த சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியைச் சோ்ந்த கணேசன் என்பவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com