மதுரை
நரசிங்கம்பட்டி மலையடிவாரத்தில் நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு
மேலூா்- மதுரை நான்குவழிச்சாலையில் நரசிங்கம்பட்டி பெருமாள்மலை பகுதியில் நாய்கள் கடித்ததில் மான் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
மேலூா்- மதுரை நான்குவழிச்சாலையில் நரசிங்கம்பட்டி பெருமாள்மலை பகுதியில் நாய்கள் கடித்ததில் மான் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
அந்தப் பகுதியில் ரத்தக் காயங்களுடன் 3 வயதுடைய ஆண் மான் இறந்து கிடந்தது. அப்பகுதியினா் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினா், தெற்குத்தெரு கால்நடை மருத்துவா் உதவியுடன் உடல் கூறாய்வு செய்து அந்த மானின் சடலத்தை வனப்பகுதியில் புதைத்தனா். காயங்களை வைத்துப் பாா்க்கும் போது, இந்த மானை நாய்கள் கடித்திருக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்தனா்.