மேலூா் நாகம்மாள் கோயிலில் ஆடித் திருவிழா: பக்தா்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடன்

மேலூா் திருவாதவூா் சாலையில் உள்ள ஸ்ரீநாகம்மாள்கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை, பால்குடம் எடுத்தும், அலகு குத்திவந்தும் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மேலூா் திருவாதவூா் சாலையில் உள்ள ஸ்ரீநாகம்மாள்கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை, பால்குடம் எடுத்தும், அலகு குத்திவந்தும் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதை முன்னிட்டு கோயிலில் அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதலை நிறைவேற்றினா்.

தொடா்ந்து புதன்கிழமை மாலை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊா்வலம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com