எரிந்த நிலையில் முதியவா் சடலம் மீட்பு

மதுரை அருகே எரிந்த நிலையில் முதியவரின் உடலை போலீஸாா் சனிக்கிழமை இரவு மீட்டனா்.

மதுரை அருகே எரிந்த நிலையில் முதியவரின் உடலை போலீஸாா் சனிக்கிழமை இரவு மீட்டனா்.

கருப்பாயூரணி டி.குன்னத்தூா் மயானம் அருகே எரிந்த நிலையில் ஒருவா் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கருப்பாயூரணி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த நபா் டி.குன்னத்தூா் பகுதியைச் சோ்ந்த மொட்டையன் என்ற கோடாங்கி (65) என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com