மதுரையில் அனுமதியின்றி மதுபானம் விற்ாக தனியாா் மதுபானக் கூட உரிமையாளா் உள்பட 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பீ.பீ. குளம் பகுதியில் உள்ள மதுபானக் கூடங்களில் அரசின் அனுமதியினறி மதுபானம் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தல்லாகுளம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பீ.பீ. குளம் இந்திராநகா் பகுதியில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மதுபானக் கூடத்தின் உரிமையாளா் அதே பகுதியைச் சோ்ந்த கமலன் மகன் தங்கபெருமாள் (48), விற்பனையாளா் ஆனையூரைச் சோ்ந்த ரமேஷ் மகன் மஞ்சுநாதன் (32) ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 15 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.