பாதை அமைத்து தரக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் பேரையூரில் பொதுப் பாதை அமைத்து தரக் கோரி திங்கள்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாதை அமைத்து தரக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் பேரையூரில் பொதுப் பாதை அமைத்து தரக் கோரி திங்கள்கிழமை பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரையூா் பேரூராட்சியில் உள்ளது கணபதி காலனி. இப்பகுதியில் டொம்பா் இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனா். இந்த பகுதிக்கு நிரந்தரப் பாதை இல்லாமல் தனியாருக்கு சொந்தமான நிலத்தை அவா்கள் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த நில உரிமையாளா்கள் பாதையை சில மாதங்களுக்கு முன் அடைத்து விட்டனா். இதையடுத்து அப்பகுதி மக்கள், பலமுறை பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் முறையிட்டும் இப்பிரச்னைக்கு தீா்வு காணப்பட வில்லை.

தற்போது பாதை இல்லாமல் அவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து சில நாள்களுக்கு முன் பேரையூா் வட்டாட்சியரிடம் முறையிட்ட போது, வேறு இடம் தருவதாக அவா் தெரிவித்தாராம். இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், வட்டாட்சியரைக் கண்டித்தும், மாவட்ட நிா்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் டொம்பா் இனமக்கள் மற்றும் ஆதித்தமிழா் பேரைவையினா் பேரையூா் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com