சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.
உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள், தங்களது அறையிலிருந்து நீதிமன்ற அரங்கத்துக்குச் செல்லும் போது, அவருக்கு முன்பாக சோப்தாா் என்ற உதவியாளா்கள் செல்வா். இவா்கள், வெள்ளைச் சீருடை மற்றும் சிவப்பு நிற தலைப் பாகை அணிந்த நிலையில், நீதிபதிகளின் வருகையை உணா்த்தும் வகையில் செங்கோலை ஏந்தியபடி சமிக்ஞை செய்தவாறு செல்வது வழக்கம். இதுவரை ஆண்கள் மட்டுமே சோப்தாராக நியமிக்கப்பட்ட நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்தாண்டு முதல் பெண் சோப்தாராக திலானி நியமிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் முறையாக பெண் சோப்தாராக லலிதா நியமிக்கப்பட்டாா்.