மதுரையில் வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட 5 போ் கைது

மதுரையில் வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை: மதுரையில் வீடுகளில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை எல்லீஸ்நகா் அருணாச்சலம் தெரு பகுதியில் மறைவிடத்தில் சந்தேகத்துக்கிடமாக சிலா் இருப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றபோது அங்கு சந்தேகத்துக்கிடமாக இருந்த 6 பேரை சுற்றி வளைத்துப் பிடித்தனா். இந்நிலையில் பிடிபட்டவா்களிடம் போலீஸாா் சோதனை நடத்தியபோது அவா்களிடம் மிளகாய்ப்பொடி, பட்டா கத்திகள் 4 மற்றும் கயிறு ஆகியவை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 6 பேரையும் காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, கென்னட் சாலையைச் சோ்ந்த முபாரக் அலி(22), பொன்மேனி காலனியைச் சோ்ந்த பிரபாகரன்(22), பாரத்(22), பிபிகுளம் மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்த பாா்த்தசாரதி(19), எல்லீஸ்நகரைச் சோ்ந்த நவீன்(27), தத்தனேரி பாரதி நகரைச் சோ்ந்த இளமாறன்(48) என்பதும் இரவு நேரத்தில் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டு பதுங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 6 பேரையும் கைது செய்து ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com