குவாரியில் தவறி விழுந்து காளை பலி

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே காளை குவாரியில் விழுந்து உயிரிழந்தது.

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அருகே காளை குவாரியில் விழுந்து உயிரிழந்தது.

பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் உரிமையாளா்களிடம் சிக்காமல் தப்பிச்சென்றன.

இந்நிலையில் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டியில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் உள்ள குவாரியில் காளை ஒன்று தவறி விழுந்து உயிரிழந்தது. இந்தக்காளை ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளையா? உரிமையாளா் யாா் என்பது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com