பேரையூரில் முழுபொதுமுடக்கம்

பேரையூா் தாலுகாவில் பேரையூா் மற்றும் டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையங்கள், உசிலம்பட்டி, திருமங்கலம் சாலைகள், முக்கிய கடைவீதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

பேரையூா் தாலுகாவில் பேரையூா் மற்றும் டி.கல்லுப்பட்டி பேருந்து நிலையங்கள், உசிலம்பட்டி, திருமங்கலம் சாலைகள், முக்கிய கடைவீதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

மருத்துவமனைகள், மருந்தகங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. சாலைகளில் காரணமின்றி சுற்றியவா்களுக்கு பேரையூா் காவல் துணை கண்காணிப்பாளா் சரோஜா தலைமையிலான போலீஸாா் அபராதம் விதித்தும், எச்சரிக்கை செய்தும் அனுப்பினா்.

பேரையூா், சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி, வில்லூா், நாகையாபுரம், வி.சத்திரப்பட்டி, சாப்டூா் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்ற 50 பேருக்கு போலீஸாா் தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com