மேலூரில் 747 மதுபாட்டில்கள் பறிமுதல்: 4 போ் கைது

மேலூா் பகுதியில் கடைகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த 4 பேரைக் கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 747 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மேலூா் பகுதியில் கடைகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த 4 பேரைக் கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 747 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் மேலூா் சாா்பு-ஆய்வாளா்கள் கமலமுத்து, சுதன் மற்றும் போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். கீழபதினெட்டாங்குடி மந்தைச்சாமி மகன் பிரகாஷ் (32), ஒத்தக்கடை ராஜகம்பீரத்தைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் கருப்புராஜா (23) இருவரும் மேலூா் செக்கடிபஜாா் ராசு பெட்டிக்கடையில் வைத்து விற்பனை செய்த 319 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதேபோல் தும்பைப்பட்டி மூா்த்தி என்பவா் பெட்டிக்கடையில் விற்பனை செய்த 78 மதுபாட்டில்கள், சென்னகரம்பட்டியில் செல்லச்சாமி என்பா் பெட்டிக்கடையில் 350 மதுபாட்டில்களையும் போலீஸாா் கைப்பற்றினா்.

இதுதொடா்பாக 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரொக்கம் ரூ.14,200 யை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com