மதுரையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை சின்னசொக்கிகுளத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் (33). இவா் தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்று விட்டாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காா் மற்றும் வங்கிக் கடன் அட்டை, ஏடிஎம் அட்டை, கைப்பேசி உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுதொடா்பாக லோகநாதன் அளித்தப் புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.