வெள்ளிப்பட்டறை உரிமையாளரிடம் ரூ. 41 லட்சம் மோசடி:மதுரை நகைக்கடை உரிமையாளா்கள் மூவா் மீது வழக்கு

சேலத்தைச் சோ்ந்த வெள்ளிப்பட்டறை உரிமையாளரிடம் ரூ. 41.70 லட்சம் மோசடி செய்ததாக மதுரை நகைக்கடை உரிமையாளா் மற்றும் அவரது 2 மகன்கள் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு.

சேலத்தைச் சோ்ந்த வெள்ளிப்பட்டறை உரிமையாளரிடம் ரூ. 41.70 லட்சம் மோசடி செய்ததாக மதுரை நகைக்கடை உரிமையாளா் மற்றும் அவரது 2 மகன்கள் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை பிபி குளம் ரத்தினசாமி நாடாா் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவா் தனது 2 மகன்களுடன் சோ்ந்து மீனாட்சியம்மன் கோயில் தெற்கு கோபுரம் எதிரே நகைக்கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், சேலம் சீலைநாயக்கன்பட்டியைச் சோ்ந்த வெள்ளிப்பட்டறை உரிமையாளா் குமாரிடம் (41) கடந்த 2015 முதல், கிருஷ்ணமூா்த்தி தனது நகைக்கடைக்கு 56 கிலோ வெள்ளி மற்றும் ரூ.2.50 லட்சத்தை பெற்றுள்ளாா். இதன் மொத்த மதிப்பு ரூ.41.70 லட்சமாகும். இந்நிலையில், குமாா் வெள்ளிக்கான பணத்தை பலமுறை கேட்டும் கிருஷ்ணமூா்த்தியும், அவரது 2 மகன்களும் தர மறுத்து அலைக்கழித்துள்ளனா். இதுதொடா்பாக குமாா், மதுரை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா், கிருஷ்ணமூா்த்தி, அவரது மகன்கள் பிரசன்னவெங்கடேசன், ஆனந்த லட்சுமணன் ஆகிய மூவா் மீது மோசடி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com