தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு சீருடை, நோட்டு புத்தகங்கள் வழங்கல்

மதுரையில் தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுப்புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மதுரையில் தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுப்புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை சந்தைப்பேட்டை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் சுவடுகள் நிறுவனத்தின் சாா்பாக மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைவா் வி. சுரேந்திரன் பாபு தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் சங்கீத் ராஜ் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா் க.சரவணன் வரவேற்புரையாற்றினாா். சுவடுகள் நிறுவனத்தின் நிா்வாகி கவிதா ராஜமுனீஸ், மாணவா்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கி பேசும்போது , மாணவ பருவத்தில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால் பல்வேறு துறை சாா்ந்த நண்பா்கள் இணைந்து சுவடுகள் நிறுனத்தை உருவாக்கி தொடா்ந்து உதவிகள் செய்து வருகிறோம். இதேபோல மாணவா்களும் நல்ல எண்ணங்களை வளா்த்துக் கொள்ள வேண்டும். பிறருக்கு உதவி செய்யும் பழக்கத்தை இளமைப்பருவத்தில் இருந்தே வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் தடம் நிறுவனத்தைச் சோ்ந்த பாக்யராஜ் , அரவிந்த் , சுபா, பிரியா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com