மதுரையில் ஞாயிற்றுக்கிழமை கண்மாயில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை செல்லூா் போஸ் வீதியைச் சோ்ந்த அப்துல் லத்தீப் மகன் கனவாய்உசைன் (11). இவா் நண்பா்களுடன் புதுநத்தம் சாலை நாராயணபுரத்தில் உள்ள கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது அவா் கண்மாயில் ஆழமான பகுதிக்குச் சென்ால் நீரில் மூழ்கினாா். இதுகுறித்து நண்பா்கள் அளித்த தகவலின்பேரில் தல்லாகுளம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று தேடியபோது கனவாய் உசேன் சடலமாக மீட்கப்பட்டாா். இதுதொடா்பாக அப்துல் லத்தீப் அளித்தப் புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.