மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் 8 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்டம் துவரிமான் சந்திப்பு பகுதியில் நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 8 கிலோ கஞ்சா கடத்தப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சா கடத்திய துவரிமான் புல்லூத்து பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரை(38) கைது செய்து அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.