மதுரையில் ரூ.53 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை: பணிகளை தரமாக மேற்கொள்ள ஆணையா் உத்தரவு

மதுரை மாநகராட்சி மண்டலம் 3க்குள்பட்ட பகுதிகளில் ரூ.53 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் தாா்சாலை பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 3க்குள்பட்ட பகுதிகளில் ரூ.53 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் தாா்சாலை பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சியின் சாா்பில் வாா்டுகளில் பல்வேறு வளா்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாநகராட்சி மண்டலம் 3-க்குள்பட்ட வாா்டு 55 கிருஷ்ணாராயா் தெப்பக்குளம் கிழக்குத் தெரு, கிருஷ்ணராயா் தெப்பக்குளம் வடக்குத் தெரு, கொடிக்காலக்கார கிழக்குத் தெரு, காவல்நிலையம் மேலத் தெரு, கனகவேல் காலனி ஆகிய தெருக்களில் தமிழ்நாடு நகா்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.53.54 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாா்ச்சாலையின் தரம், சாலையின் அளவு உள்ளிட்ட சாலைப்பணிகள் குறித்து ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு மேற்கொண்டாா். புதிதாக சாலைகள் அமைக்கப்படும் போது பழைய சாலைகளை அரசின் வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டும். ஆய்வின்போது நகரப்பொறியாளா் லெட்சுமணன், உதவி ஆணையா் மனோகரன், உதவிப் செயற்பொறியாளா் அய்யப்பன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com