எரிவாயு உருளை கிடங்குக்கு அருகே தீ விபத்து: தீ அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிா்ப்பு

மதுரையில் சமையல் எரிவாயு உருளை சேமிப்புக் கிடங்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

மதுரை: மதுரையில் சமையல் எரிவாயு உருளை சேமிப்புக் கிடங்கு அருகே தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

மதுரை அனுப்பானடி சின்னக்கண்மாய் பகுதியில் சமையல் எரிவாயு உருளைகள் சேமிப்புக்கிடங்கு உள்ளது. இதன் அருகே உள்ள அடா்ந்த குப்பைமேட்டில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்தது. இந்நிலையில் தீ பரவியதையடுத்து அப்பகுதியினா் மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தீ அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த எரிவாயு உருளை கிடங்குக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. மேலும் கீரைத்துறை போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று விசாரணை நடத்தினா். தீயைணப்பு வீரா்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com