தேசிய அளவிலான மாஸ்டா் பளுதூக்கும் போட்டியில் மதுரை ஸ்ரீ சாரதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் காஞ்சனா தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.
இப் போட்டிகள் கா்நாடக மாநிலம் பெங்களூருவில் அண்மையில் நடைபெற்றது. பளுதூக்கும் போட்டியில் முதலிடம் பெற்ற உடற்கல்வி ஆசிரியா் காஞ்சனா, ஜூலையில் ஜப்பானில் நடைபெறும் சா்வதேச மாஸ்டா் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா். பதக்கம் வென்ற ஆசிரியருக்கு பள்ளி நிா்வாகத்தினா், சக ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.