மேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
இப்பகுதியில் பகல் நேரத்தில் கடும் வெயில் நிலவி வந்த நிலையில், மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. மேலூா், கொட்டாம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை 4 மணியளவில் தொடங்கி ஒன்றரை மணிநேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பின்னா் நீண்ட நேரம் சாரலாகப் பெய்தது.