ரேஷன் அரிசி பறிமுதல்: வேன் ஓட்டுநா் கைது

மதுரையில் வேனில் கடத்திய 1,600 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் வேனில் கடத்திய 1,600 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை- ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிலைமான் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த மினி வேனில், ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, மினி வேனில் 40 மூட்டைகளில் இருந்த 1,600 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். மேலும், மேலஅனுப்பானடி ஜே.ஜே.நகரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் முத்துக்குமாரை(46) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com