கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலப் பணிகளைவிரைவில் தொடங்க வலியுறுத்தல்

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு, அப்பல்லோ மருத்துவமனை சந்திப்புகளில் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியது.

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு, அப்பல்லோ மருத்துவமனை சந்திப்புகளில் மேம்பாலம் கட்டும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியது.

இந்த கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் பிலால்தீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜாபா் சுல்தான் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவா் ரபீக் அஹமது பங்கேற்று பேசினாா். பொதுச் செயலா் ஜியாவுதீன், அமைப்பு பொதுச் செயலா் பகுருதீன் ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.

கூட்டத்தில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால் மருத்துவமனையின் எதிரே உள்ள சாலை வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்த வசதி செய்து தர வேண்டும்.

மதுரை நகா்ப்புற பகுதி அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பு, கோரிப்பாளையம் சந்திப்புகளில் வாகனங்கள் அதிக நேரம் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பகுதிகளில் மேம்பாலம் கட்டும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மதுரை நகரின் பல்வேறு இடங்களில் புதைச் சாக்கடை பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் பெரும்பாலான இடங்களில் கழிவுநீா் வெளியேறி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

எனவே புதைச் சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

பொதுக்குழுவில் தொகுதி, வாா்டு, ஒன்றிய மற்றும் கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com