விருதுநகா் அருகே கிட்டங்கியில் பதுக்கிய 1,250 கிலோ ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பாண்டியன் நகா் பகுதியில், ஒரு கிட்டங்கியில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீஸாா் சோதனை நடத்தினா். அங்கு தலா 25 கிலோ எடையுடன் 50 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய சங்கா் மகன் முனியசாமியைத் தேடி வருகின்றனா்.