தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, சிறையில் இருக்கும் சகோதரா்களுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் குமாா். இவரது சகோதரா் சரவணன். ஒரே வீட்டில் இருவரின் குடும்பமும் வசிக்கிறது. இந்நிலையில் இருவருக்கும் குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.
சகோதரா்கள் இருவரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவா்களது தாய் நிா்மலா, செவ்வாய்க்கிழமை காலமானாா். இதையடுத்து தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இருவரும் தனித்தனியே சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன், புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தங்களது தாயின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ளும் வகையில், அவா்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.