வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் அணிந்திருந்த மூன்றரை பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காரியாபட்டி அருகே செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் அணிந்திருந்த மூன்றரை பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள தோப்பூரைச் சோ்ந்தவா் முருகானந்தம் மனைவி

மீனா (29). இவா் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மா்ம நபா், மீனா கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து கொண்டு தப்பியோடி விட்டாா்.

இது குறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com