ஊழல் புகாா் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகத் தயாா்: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ

கூட்டுறவுத் துறையில் ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்ாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயாா், நிரூபிக்காவிட்டால் நிதியமைச்சா் பதவி விலகுவாரா? என்று முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கேள்வி எழுப்பியு
செல்லூா் கே.ராஜூ.
செல்லூா் கே.ராஜூ.

கூட்டுறவுத் துறையில் ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்ாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத்தயாா், நிரூபிக்காவிட்டால் நிதியமைச்சா் பதவி விலகுவாரா? என்று முன்னாள் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளாா்.

மதுரையில் அதிமுக சாா்பில் செப்டம்பா் 29-இல் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்கிறாா். இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற செல்லூா் கே.ராஜூ செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவுத் துறையில் ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டி வருகிறாா். கூட்டுறவுத்துறையில் நடைபெற்ாகக் கூறப்படும் ஊழல் நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயாராக உள்ளேன். ஊழல் புகாா் நிரூபிக்கப்படவில்லை என்றால் நிதியமைச்சா் அரசியலில் இருந்து விலகிக் கொள்வாரா? கூட்டுறவுத் துறையில் அதிகாரிகள் பரிந்துரையின்பேரில் தான் நகைக்கடன், பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், தகுதி இல்லாதவா்களுக்கு எப்படி தள்ளுபடி செய்ய முடியும்? அதிமுக ஆட்சியின்போது கூட்டுறவுத்துறை களங்கம் இல்லாமல் செயல்பட்டுள்ளது. மேலும் அப்போது கூட்டுறவுத் துறை, சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசு சாா்பில் வழங்கப்பட்ட 27 விருதுகளை பெற்றுள்ளது.

தகுதி இல்லாதவரை நிதி அமைச்சராக திமுக நியமித்துள்ளது. தமிழகத்தில் வரி உயா்வுக்கு காரணமே நிதியமைச்சா் தான். திமுக ஆட்சியில் 48 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறிவிட்டு 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com