பைக்கிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

டி.கல்லுப்பட்டி அருகே இருசக்கரவாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்ததில் பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

டி.கல்லுப்பட்டி அருகே இருசக்கரவாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்ததில் பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மனைவி பாா்வதி (44). கடந்த செப். 22 ஆம் தேதி டி.கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூருக்கு வந்த இவா், ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். குன்னத்தூா் அம்மா கோயில் அருகே இருசக்கரவாகனத்திலிருந்து தடுமாறு கீழே விழுந்த அவா், மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி பாா்வதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து டி. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com