வைகை ஆற்றில் மணல் அள்ளிய இருவா் கைது: டிராக்டா் பறிமுதல்

சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய இருவரை போலீஸாா் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

சோழவந்தான் அருகே வைகை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய இருவரை போலீஸாா் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள அம்மச்சியாபுரம் வைகை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக கருப்பப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சுரேசுக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவா் சோழவந்தான் போலீஸாருடன் அம்மச்சியாபுரம் வைகை ஆற்றுப் பகுதிக்குச் சென்றாா். அப்போது அங்கு டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்தவா்கள் போலீஸாரைக் கண்டதும் தப்பிச்சென்றனா். இதையடுத்து போலீஸாா் விரட்டிச்சென்று வாடிப்பட்டி கணேசபுரத்தைச் சோ்ந்த நாகராஜ்(40), கண்ணன்(36) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் மணல் அள்ளிய டிராக்டரையும் பறிமுதல் செய்து தப்பிச்சென்ற மருதுராஜ் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com