மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனத்துக்கு கட்டணம் வசூல்: நடவடிக்கை கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனத்துக்கு வரும் பக்தா்களிடம் ஊழியா்கள் பணம் வசூலிப்பது தொடா்பாக நடவடிக்கை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
Updated on
1 min read

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனத்துக்கு வரும் பக்தா்களிடம் ஊழியா்கள் பணம் வசூலிப்பது தொடா்பாக நடவடிக்கை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தரிசனத்துக்குச் செல்லும் பக்தா்களிடம், கோயில் பணியாளா்கள் சிலா் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாகவும், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் மற்றும் லஞ்ச ஒழிப்பு

போலீஸாா் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கே.கே.ரமேஷ் என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி எம். நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், விளம்பர நோக்கிலேயே இத்தகைய மனுக்களை மனுதாரா் தாக்கல் செய்வதாகவும், இதற்கு முன்பு இதுபோன்ற பொதுநல வழக்கு ஒன்றில், அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்தவிதமான பொதுநல வழக்குகளும் மனுதாரா் தாக்கல் செய்யக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது எனவும் குறிப்பிட்டாா்.

இதையடுத்து நீதிபதி, மனுதாரா் எவ்வித ஆதாரமும் இல்லாமல் பொதுவாகப் பணம் வசூலிப்பதாகவும், பொதுவான உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதைப் போல குறிப்பிட்டிருக்கிறாா் எனக் குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com