எம்ஜிஆர் 105-வது பிறந்த நாள்: உசிலம்பட்டியில் அமமுக கொண்டாட்டம்

உசிலம்பட்டியில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் 105-வது பிறந்தநாள் விழாவை அமமுக கட்சியினர் இனிப்புகள் வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினர்.
உசிலம்பட்டியில் அமமுக கொண்டாட்டம்
உசிலம்பட்டியில் அமமுக கொண்டாட்டம்

உசிலம்பட்டியில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் 105-வது பிறந்தநாள் விழாவை அமமுக கட்சியினர் இனிப்புகள் வழங்கி திங்கள்கிழமை கொண்டாடினர்.

உசிலம்பட்டி   தேனி சாலையில் உள்ள முருகன் கோவில் அருகே தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 105வது பிறந்தநாள் விழாவுக்கு உசிலம்பட்டி நகரச் செயலாளர் குனசேகர பாண்டியன் தலைமையில், மாநில அமைப்புச் செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மகேந்திரன்  முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ கே டி ராஜா ஒன்றியச் செயலாளர்கள் அபிமன்னன், ஒன்றிய துணைச் சேர்மன் மலேசியா பாண்டி, சேடபட்டி ஒன்றிய செயலாளர்கள் வீர பிரபாகரன், அய்யர் என்ற ராமகிருஷ்ணன்,  ஒன்றிய அவைத் தலைவர்கள் செல்லத்துரை, கே ஆர் ராமன், பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜ், நகர இளைஞரணி உக்கிரபாண்டி,  பிரகதீஸ்வரன் ,தர்மா தெய்வேந்திரன், ஒச்சு என்ற சிவக்குமார், சிவன் ஜி, சாமி குணா, மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com