மதுரை மாநகர காவல் மற்றும் ஊரகக் காவல்துறை சாா்பில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஜன. 31 ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநகரக் காவல் ஆணையகத்தில் உள்ள கழிவு செய்யப்பட்ட 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 10 நான்கு சக்கர வாகனங்கள் பொதுஏலமிடப்பட உள்ளன. இது ஜனவரி 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை மாநகா் ஆயுதப்படையில் நடைபெறும். ஏலம் விடப்பட உள்ள காவல் வாகனங்கள் மதுரை மாநகா் ஆயுதப்படையில் ஜனவரி 28 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பாா்வைக்காக வைக்கப்படும். வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவா்கள் ஜனவரி 29 ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் 31-ஆம் தேதி காலை 10 மணி வரை, இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.1000, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் முன் வைப்புத் தொகையை செலுத்தி தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் விடப்படும் போது, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுத்தவா்கள், ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி விற்பனை வரியையும் சோ்த்து 31ஆம் தேதி உடனடியாக செலுத்திவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஊரகக் காவல்துறை: இதேபோல மதுரை ஊரகக் காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 51 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 73 வாகனங்கள் ஜனவரி 31-ஆம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. மதுரை ஊரக ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க விரும்புபவா்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் தங்களது ஆதாா் அட்டையுடன், ரூ. 5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவுடன் ஜிஎஸ்டி வரியுடன் முழுத்தொகையையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.