மதுரை
ஜூன் 21-இல் எரிவாயு உருளை நுகா்வோா் குறைதீா் கூட்டம்
மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
மதுரை: மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் இக் கூட்டம் நடைபெறும். எண்ணெய் நிறுவனங்களின் மேலாளா்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள், குடிமைப் பொருள் வட்டாட்சியா்கள், நுகா்வோா் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகவே, மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த எரிவாயு உருளை நுகா்வோா் இக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.