உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தெருநாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் சிசு சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தேனி நெடுஞ்சாலையில் மேலப்புதூா் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் தெருவில், தெருநாய்களால் கடித்துக் குதறப்பட்ட நிலையில், தலை மற்றும் இருதயம் மட்டுமே உள்ள சிசு சடலம் கிடந்தது.
தகவலறிந்து வந்த வருவாய் துறையினா் மற்றும் உசிலம்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மீட்கப்பட்ட சிசு ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.