மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை கோ.புதூரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். முதுகலை கணித ஆசிரியா் தமிழ்க்குமரன் முன்னிலை வகித்தாா். கும்பகோணம் கரிகாலன் வரலாற்று ஆய்வு மைய நிறுவனா் ஆதலையூா் சூரியகுமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தொன்மை பாதுகாப்பு மன்றத்தை தொடங்கி வைத்தாா். மேலும் நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்கள் மூலமாகவே தமிழ் நாகரிகம் தான் உலகின் பழமையான நாகரீகம் என்று அறிகிறோம். எனவே நாம் பழம் பொருள்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்றாா். முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவா்கள் வைத்திருந்த பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தொழிற்கல்வி ஆசிரியா் முகைதீன் பிச்சை வரவேற்புரையாற்றினாா். பட்டதாரி ஆசிரியா் தெளபிக் ராஜா நன்றியுரையாற்றினாா்