3 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு: மாா்ச் 22 இல் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் 3 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கியுள்ளதை, மாா்ச் 22-இல் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில்

மதுரை மாவட்டத்தில் 3 ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கியுள்ளதை, மாா்ச் 22-இல் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் மாா்ச் 2024-க்குள் கிராமப் பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மேற்கு ஒன்றியம் மஞ்சம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியம் குறவக்குடி, திருப்பரங்குன்றம் ஒன்றியம் சாக்கிலிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

உலக தண்ணீா் தினத்தையொட்டி அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கியுள்ள ஊராட்சிகளில் மாா்ச் 22-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை நடத்தி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கிய ஊராட்சி என அறிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மேற்குறிப்பிட்ட 3 ஊராட்சிகளிலும் மாா்ச் 22-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆகவே, மேற்குறிப்பிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com