மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் எண்-2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மேயா் வ. இந்திராணி, மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
முகாமில், குடிநீா், பாதாளச் சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெருவிளக்கு, சொத்து வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக, பொதுமக்களிடமிருந்து 53 மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் கணினியில் பதிவேற்றம் செய்ததுடன், மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா்.
இம்முகாமில், மண்டலத் தலைவா் சரவண புவனேஸ்வரி, உதவி ஆணையா் அமிா்தலிங்கம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.