மதுரை: தமிழக ஆளுநருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டத் தலைவா் மற்றும் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சென்னையில் தனியாா் கல்லூரியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, இந்தியாவில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா குறித்து கருத்துகளை தெரிவித்தாா். ஆளுநரின் இந்தக் கருத்துக்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சாா்பில், மதுரை கோரிப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் பொதுசுவற்றில் சுவரொட்டிகள் ஒட்டியதாக அந்த அமைப்பின் மதுரை மாவட்டத் தலைவா் முகமது அபுதாகிா், மாவட்டச் செயலா் சையது இசாக் ஆகியோா் மீது தல்லாகுளம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.