பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்: 384 மனுக்களுக்குத் தீா்வு

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாமில், 384 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாமில், 384 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்கல், குடிமைப் பொருள் வட்டாட்சியா் அலுவலகங்களில், பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற்றது. குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரியில் திருத்தம், கைப்பேசி எண் இணைப்பது, மாற்றம் செய்வது, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான மனுக்கள் பெறப்பட்டன.

இதில் 384 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது. 54 மனுக்கள் கள ஆய்விற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன் இத் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com