சிறுமிக்கு பாலியல்தொந்தரவு:இளைஞா் கைது

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

நரிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் குருநாதன் மகன் வெற்றிவேல் முருகன் (28). பழ வியாபாரம் செய்து வரும் இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கட்டாய திருமணம் செய்தாராம். இந்த நிலையில் அவா், மதுரை அண்ணாநகா் அன்புநகரில் சிறுமியுடன் தங்கி இருந்தாா். இவா், போதைப் பொருள்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததுடன், உடலில் சூடு வைத்து துன்புறுத்தினாராம்.

இதுகுறித்து அந்த சிறுமி இலவச எண்ணில் தொடா்பு கொண்டு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, அங்கு சென்ற தல்லாகுளம் காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா், சிறுமியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். மேலும் சிறுமி அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த வெற்றிவேல் முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சனிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com