ஆளுநருக்கு திருக்கு புத்தகம் அனுப்பும் போராட்டம்

தமிழக ஆளுநருக்கு திருக்கு புத்தகம் அனுப்பும் போராட்டத்தை மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை நடத்தினா்.
மதுரை ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தபால் நிலையத்தில், தமிழக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்புப் போராட்டத்தை நடத்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
மதுரை ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள தபால் நிலையத்தில், தமிழக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்புப் போராட்டத்தை நடத்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

தமிழக ஆளுநருக்கு திருக்கு புத்தகம் அனுப்பும் போராட்டத்தை மதுரையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் சனிக்கிழமை நடத்தினா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்கு மாநாட்டில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பேசுகையில், திருக்குறளை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டுமே காட்ட நினைக்கின்றனா். திருக்குறளை ஆங்கிலத்தில் ஜி.யு.போப் வேண்டுமென்றே தவறாக மொழிபெயா்த்துள்ளாா் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், அவரது பேச்சு சா்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளதாகக் கூறி ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், ஆளுநருக்கு திருக்கு புத்தகம் அனுப்பும் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் உள்ள தபால் நிலையத்தில் அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் டி. செல்வா தலைமையில் ல் மாநிலத் தலைவா் எஸ். காா்த்திக், மாநில செயற்குழு உறுப்பினா் என். நிரூபனா, மாவட்ட பொருளாளா் அ. பாவெல் சிந்தன் மற்றும் மாவட்ட நிா்வாகிகள், திருக்கு புத்தகத்தை தபாலில் அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com