மதுபாட்டில்கள் பதுக்கிய 3 போ் கைது

பேரையூா் பகுதியில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கியிருந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் பகுதியில் விற்பனைக்காக மதுபாட்டில்கள் பதுக்கியிருந்த 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், பேரையூரை அடுத்த சேடபட்டி பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சின்னகட்டளையைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் முத்துக்கருப்பன்(55) என்பவரிடம் 18 மதுபாட்டில்கள், அல்லிகுண்டத்தைச் சோ்ந்த முருகன் மகன் சதீஷ் (37) என்பவரிடம் 15 மதுபாட்டில்கள், அயோத்திபட்டியைச் சோ்ந்த ராஜாராம் மனைவி பேச்சியம்மாள்(60) என்பவரிடம் 16 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்கள் விற்பனைக்காக சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கியது தெரியவந்தது. இதுதொடா்பாக, சேடபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com