ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கக் கூட்டு வழிபாடு

ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மதுரை மாநில அலுவலகத்தில் கூட்டு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத்தின் மதுரை மாநில அலுவலகத்தில் கூட்டு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் பி. சுந்தரவடிவேலன் தலைமை வகித்தாா். மாநகா் பொறுப்பாளா்கள் பாா்வதி, வேலாயுதம், கமலம், பி. மைவிழிச்செல்வி, கிளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா். காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திருவாசகம் முற்றோதப்பட்டது.

திருவாசகம் முற்றோதலினிடையே (விண்ணப்பித்தலில்), மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தீ விபத்து குறித்த விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை அரசு வெளியிட வேண்டும், தீ விபத்துக்குப் பின்னரான பாதுகாப்பு, மேலாண்மை நடவடிக்கைகளை கோயில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற விண்ணப்பங்கள் வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com