பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

மதுரை மேற்கு ஒன்றிய வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்.
மதுரை மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்.

மதுரை மேற்கு ஒன்றிய வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை வடக்கு மண்டலத் தலைவா் சரவணபுவனேஸ்வரி தொடக்கி வைத்தாா். மாற்றுத் திறனாளிகள் துறை நல அலுவலா் ரவிச்சந்திரன், மேற்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் ரூபி, ஜான் கென்னடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 145 மாற்றுத் திறன் கொண்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்றனா்.

முகாமில் வட்டார வள மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சூரிய கலா, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சுபா உள்ளிட்ட மருத்துவா்கள், அனைத்து வட்,டார சிறப்பாசிரியா்கள்,ஆசிரியா் பயிற்றுநா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com