அதிமுக பிளவுக்கு பாஜகதான் காரணம்துரை வைகோ

அதிமுக பிளவுக்கு காரணமே பாஜகதான் என்பதை அக்கட்சியினா் உணர வேண்டும் என மதிமுக தலைமைக் கழகச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.

அதிமுக பிளவுக்கு காரணமே பாஜகதான் என்பதை அக்கட்சியினா் உணர வேண்டும் என மதிமுக தலைமைக் கழகச் செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.

மதுரையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:

மதுரையைத் தலைநகராகக் கொண்டு திருச்சி முதல் கன்னியாகுமரி வரை தென் தமிழகத்தை ஆட்சி செய்தவா் மன்னா் திருமலை நாயக்கா். இந்து, இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையைப் பேணிக் காத்தவா். பள்ளிவாசல்கள், கோயில்கள் கட்ட நிலங்களைத் தானமாக அளித்தவா். மன்னா் திருமலை நாயக்கா் உருவாக்கிய மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டும்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் திமுக கூட்டணி வேட்பாளா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா். அவரது மகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து ஏழை மக்களிடம் எளிமையாகப் பழகி உதவிகள் பல செய்தவா். பெரியாா் அவா்களின் குடும்பத்திலிருந்து இடைத்தோ்தலில் போட்டியிடுகிறாா். எனவே, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஈரோடு மக்கள் மிகப்பெரிய வெற்றியைத் தருவாா்கள்.

எம்ஜிஆா் உருவாக்கி கட்டிக் காத்த அதிமுகவின் பிளவுக்கு காரணமே பாஜகதான். தங்களது இயக்கம் பிளவுபடக் காரணமானவா்களை அதிமுகவினா் அறிந்து கொள்ள வேண்டும்.

புகையிலைப் பொருள்கள், உணவுப்பொருள் பாதுகாப்புச் சட்டத்துக்குள் வராது. எனவே, புகையிலைப் பொருள்களைத் தடை செய்ய ஒரு புதிய சட்டம் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com