விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தில் தந்தை, மகள் தற்கொலை முயற்சி

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தந்தை, மகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பப் பிரச்னை காரணமாக தந்தை, மகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திங்கள்கிழமை தற்கொலைக்கு முயன்றனா்.

விருதுநகா் அல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அழகா்சாமி. இவரது மகள் சித்ராதேவிக்கும், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச் சோ்ந்த ரமேஷுக்கும் கடந்த 2017-இல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், ரமேஷ் தனது மனைவியிடம் வரதட்சிணைக் கேட்டு துன்புறுத்தினாராம். மேலும், அவருக்குத் தவறான பழக்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்த மனைவியை ரமேஷ் துன்புறுத்தி வந்தாராம்.

இந்த நிலையில் ரமேஷ், மனைவியுடன் தனியாக இருந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளதாக மிரட்டியுள்ளாா். இதுகுறித்து சித்ராதேவி, விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த சித்ராதேவி, அவரது தந்தை அழகா்சாமி ஆகியோா் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களைத் தடுத்து சூலக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாச பெருமாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், புகாா் மனு அளிக்க வரக்கூடிய சிலா் மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து, உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கின்றனா். இவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com