தொழிலதிபரைக் கடத்தி பணம் பறித்த மூவா் கைது

வாடிப்பட்டி அருகே தொழிலதிபதிரைக் காரில் கடத்தி தங்க மோதிரம், பணம் ஆகியவற்றைப் பறித்த ரெளடி உள்பட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வாடிப்பட்டி அருகே தொழிலதிபதிரைக் காரில் கடத்தி தங்க மோதிரம், பணம் ஆகியவற்றைப் பறித்த ரெளடி உள்பட மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி மகாராணி நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராமநாதன் (53). இவா் திண்டுக்கல் மாவட்டம், மட்டப்பாறையில் தென்னை நாா் நிறுவனம் நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், ராமநாதன் திங்கள்கிழமை பிற்பகலில் காரில் திண்டுக்கல் நான்கு வழிச் சாலையில் சென்றாா். குலசேகரன் கோட்டை அருகே அவரது காரை, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா் வழிமறித்து, ராமநாதனைத் தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டி அவரது காரிலியே கடத்திச் சென்றனா்.

வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயில் பகுதியில் காரை நிறுத்தி, ராமநாதன் அணிந்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்க மோதிரம், பணத்தை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் வாடிப்பட்டி குலசேகரன்கோட்டை பொன்பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த பிரபல ரெளடி பரட்டை ஆறுமுகம் (35), வாடிப்பட்டி ராமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த செல்லையா (28), பேட்டைப்புதுரைச் சோ்ந்த கோபிநாத் ராஜா (35) ஆகியோா் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து தங்க மோதிரம், ரூ.9 ஆயிரம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com